புதுச்சேரி

அறுவடை செய்த நெல்லை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்

புதுவையில் திடீர் மழையால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் சாலையில் உலர வைத்தனர்.

தினத்தந்தி

பாகூர்

புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் சொர்ணாவாரி நெல் பயிர் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்தால் விளைந்த நெல்மணிகள் வயலில் உதிர்ந்துவிடும் என்பதால் விவசாயிகள் அறுவடையை தீவிரப்படுத்தினர். ஏக்கருக்கு சுமார் 40 மூட்டை கிடைக்க வேண்டிய நிலையில், மழை காரணமாக 35 மூட்டைக்கும் கீழ் மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த ஈரமான நெல்லை பாகூர் பிள்ளையார்கோவில் சந்திப்பில் சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். காய்ந்த பின்னர் அவற்றை மூட்டை கட்டி வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து