புதுச்சேரி

பெண் பிணம்

மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரே 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கண்டெடுக்கப்பட்டது, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரே 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது இடது கையில் சக்திவேல் என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் பச்சை நிற சேலை அணிந்திருந்தார். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து