புதுச்சேரி

பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை

காரைக்கால் அருகே குடும்ப தகராறில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

கீழகாசாக்குடி கோத்தாரி நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 35) பைனான்சியர். இவரது மனைவி சரண்யா (30), கல்வித்துறையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் ஆனந்தனுக்கும், சரண்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று  சரண்யா தனது குழந்தைகளை மாமியாரிடம் ஒப்படைத்துவிட்டு, சொந்த வேலை காரணமாக புதுச்சேரிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்து காணப்பட்ட, ஆனந்தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து