புதுச்சேரி

மீன் வியாபாரி பலி

காரைக்கால் பிள்ளைதெருவாசல் அருகே குறுக்காக ஓடிய பன்றி மோட்டார் சைக்கிளின் மீது மோதிய விபத்தில் மீன் வியாபாரி சகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரைக்கால்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருவிளையாட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30). மீன் வியாபாரி. அவரது மனைவி வினோதினி. சம்பவத்தன்று இவர், துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் நெடுங்காடு வழியாக சென்றுள்ளார். காரைக்கால் பிள்ளைதெருவாசல் அருகே வந்தபோது சாலையின் குறுக்காக ஓடிய பன்றி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்