மும்பை

24 வார்டுகளில் இலவச யோகா பயிற்சி வகுப்பு- மாநகராட்சி அறிவிப்பு

வருகிற 1-ந் தேதி முதல் 24 வார்டுகளில் இலவச யோகா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

  வருகிற 1-ந் தேதி முதல் 24 வார்டுகளில் இலவச யோகா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.

யோகா பயிற்சி வகுப்பு

  இது தொடர்பாக மும்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  இந்த யோகா வகுப்புகள் ஒவ்வொன்றும் 30 நபர்கள் மிகாமல் இருக்க வேண்டும். யோகா வகுப்பில் கலந்து கொள்ளும் விருப்பமுடையவர்கள் உள்ளூர் வார்டு அலுவலகத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். இந்த வகுப்புகள் திறந்த வெளிகள், மாநகராட்சி பள்ளிகள், திருமண மண்டபங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வாரத்தின் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

பயிற்சியாளர்கள்

  இந்த வகுப்புகளில் யோகா பயிற்சி அளிக்க தேவையான பயிற்சியாளர்களை மாநகராட்சி நியமனம் செய்யும். மும்பை மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 200 சிவ் யோகா கேந்திரா செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

-------

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்