புதுச்சேரி

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி துக்குப்போட்டு தற்கொலை,

திருபுவனை

திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையம் மாங்குப்பம் ரோட்டை சேர்ந்தவர் உத்திரவேல் (வயது 44). கூலித்தொழிலாளி. அவரது மனைவி பிரபா (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உத்திரவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் பிரபா கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் புதுவையில் தங்கியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டின் மரச்சட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்