புதுச்சேரி

ஆக்கிரமிப்பில் இருக்கும் கருமாதி கொட்டகை

காரைக்காலில் ஆக்கிரமிப்பில் இருக்கும் கருமாதி கொட்டகையை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட தலித் பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பினர் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் 'காரைக்கால் திருநகர், பெரிய பேட், கல்லறைப் பேட், பறவை பேட், எம்.ஜி.ஆர்.நகர், முல்லை நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் கருமாதி கொட்டகை காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ளது. அங்கு நகராட்சி சார்பில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் செலவில் சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிநபர் ஒருவர் கருமாதி கொட்டகையை ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து