புதுச்சேரி

கேரள வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் 45 அடி ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சவுகாத் (வயது 23) என்பதும், ஆம்பூர் சாலையில் சாவியுடன் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்