ஆன்மிகம்

திருமணத் தடை நீக்கும் முருகப்பெருமான்

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் 'செவ்வாய் தோஷம்' என்று கருதப்படும். அவர்களுக்குத் திருமணத்தடை, புத்திரப் பேற்றில் தடை, குடும்ப ஒற்றுமை குறைவு, தொழிலில் இழப்பு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி போன்றவை ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. பழனி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய்க்குரிய பரிகாரத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

SCROLL FOR NEXT