ஆன்மிகம்

மார்கழி பஜனை

தென்காசியில் மார்கழி பஜனை நடந்தது.

தென்காசி கீழப்பாளையம் மற்றும் மாதாங்கோவில் தெருவில் மார்கழி மாத பஜனை கடந்த மார்கழி மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரை தினமும் நடைபெறுகிறது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஆண்டாள் பாசுரங்கள் பாடிய படி வீதி உலா வருகின்றனர். இந்த பஜனை நூறாண்டுகளை கடந்து பாரம்பரிய முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT