புதுச்சேரி

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வில்லியனூரில் வடக்கு மாநில அ.ம.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

வில்லியனூர்

எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனூரில் புதுச்சேரி வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி.சேகர் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அ.ம.மு.க. இணைச்செயலாளர் லாவண்யா, மாநில மகளிர் அணி செயலாளர் காமாட்சி, துணைச்செயலாளர் தமிழரசி, கட்சியின் முன்னோடிகள் ரகுபதி, ஆனந்தன், அம்மா பேரவை செயலாளர் காண்டீபன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், இலக்கிய அணி செயலாளர் பாலு, மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர்கள் செந்தில், ராமச்சந்திரன், செல்லா என்கிற தமிழ்செல்வன், கலியமூர்த்தி, புஷ்பா, சுப்புலட்சுமி, அண்ணாமலை, மீனன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான ஆரோவில் பகுதிக்கு நேற்று காலை வந்தார். அவருக்கு புதுவை எல்லையில் அ.ம.மு.க. சார்பில் மாநில செயலாளர்கள் எஸ்.டி.சேகர் மற்றும் யூ.சி.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்