தலைப்புச் செய்திகள்

விருதுநகரில் லேசான நில அதிர்வு

நில அதிர்வு காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் வீதிகளில் திரண்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரவு 9.01 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 3 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 2 முறை அடுத்துதடுத்து நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில நொடிகள் நீடித்த நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.