புதுச்சேரி

தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

மூலக்குளம் அருகே திருமணம் ஆன 8 மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் என தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

மூலக்குளம்

மூலக்குளம் அடுத்த பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசி (வயது 41). அவரது மகள் மதுபாலா (வயது 19). இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் லேம்பார்ட் சரவணன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் வசந்தகுமாரின் குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மதுபாலா நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே மதுபாலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரெட்டியார்பாளையம் போலீசில் மதுபாலாவின் தாயார் துளசி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து