செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் புதிதாக 2,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று புதிதாக 2,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,877 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் தற்போது கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11,876 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் அதிகபட்சமாக பெங்களூருவில் 12,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 16,527 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 452 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்