செய்திகள்

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

வடக்குகாஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ரீபான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், ராஷ்டிரிய ரைபிள் பிரிவினரும், காஷ்மீர் தனிப்படை போலீசாருடன் நேற்று அதிகாலை 4 மணிக்கு விரைந்து சென்றனர். முன்னதாக அந்தப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் செல்போன், இணையதள சேவையும் முடக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கர ஆயுதங்களும் சிக்கின. தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு