செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 325 தமிழர்கள் தாயகம் திரும்பினர்

சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து 325 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா ஊரடங்கால் லண்டன், அபுதாபி ஆகிய நாடுகளில் சிக்கிய 325 தமிழகர்கள் 2 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர். விமான நிலைத்திலேயே சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவர்கள், அரசு பேருந்துகள் மூலம் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஒட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஒமன் நாட்டில் இருந்து வந்த 4 பேர், குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து வந்த தலா 3 பேர் என 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து