செய்திகள்

அசாமில் வெள்ளத்திற்கு 59 பேர் பலி; 45.4 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு 59 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாமில் பருவமழையை தொடர்ந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் 30 மாவட்டங்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசாமில் நேற்றுவரை வெள்ள பாதிப்புக்கு 59 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சத்து 40 890 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இதற்காக அசாம் மாநில பேரிடம் மேலாண் கழகம் வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்