செய்திகள்

மடத்துக்குளத்தில் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவ-மாணவிகள் சாலை மறியல்

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மடத்துக்குளத்தில் முன்னாள் மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2018-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச மடிக்கணினியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு உடுமலை- பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மடிக்கணினி உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறிய நாளில் முன்னாள் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவ-மாணவிகள் நேற்று மடத்துக்குளத்தில் திரண்டனர். பின்னர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் பழனி- உடுமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த முன்னாள் மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை