செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு; சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேச கட்சி போராட்டம்

ஆந்திர பிரதேசத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் பேருந்தில் பயணம் செய்தனர்.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திர பிரதேச சாலை போக்குவரத்து கழகம் பேருந்து கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வால், போக்குவரத்திற்காக பேருந்துகளை நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என கூறி பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேச கட்சிகள் கடும் விமர்சனம் செய்துள்ளன.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்த பேரணி அமராவதி நகரில் சட்டசபை அருகே நடந்தது.

அதேவேளையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் மற்றும் எம்.எல்.சி.யான, தெலுங்கு தேச கட்சியின் பொது செயலாளர் நர லோகேஷ் மங்களகிரியில் இருந்து பேருந்து ஒன்றில் செயலகம் நோக்கி பிரயாணம் செய்து பேருந்து கட்டண உயர்வுக்கு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்