செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம்,

சிதம்பரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவருடைய மனைவி லதா (வயது 51). இவர் ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் ராஜேசுக்கு(21) நேற்று முன்தினம் பிறந்த நாள். இதற்காக லதா, சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

தெற்கு கோபுரம் அருகே உள்ள முக்குருணி விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு இருந்த சிதம்பரத்தை சேர்ந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்காக கொண்டு வந்த கூடையை கொடுத்தார். அப்போது லதா, தனது மகன் பெயர் மற்றும் ராசி, நட்சத்திரத்தை கூறுவதற்குள் தீட்சிதர் தர்ஷன் கருவறைக்குள் சென்று, அர்ச்சனை செய்து முடித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு