செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது ஆஸ்திரேலியா

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும்போது, உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அந்தந்த நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.

தினத்தந்தி

மெல்போர்ன்,

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச பயணங்கள் படிப்படியாக இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகின்றன. எனினும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மட்டுமே பெரும்பாலான நாடுகள் அனுமதித்து வருகின்றன.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும்போது, உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அந்தந்த நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய செல்ல காத்திருக்கும் இந்திய மாணவர்கள், இனி எந்த சிக்கலும் இன்றி செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.

சீனாவால் தயாரிக்கப்பட்ட 'சினோவாக்' தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.எனினும், இந்திய மாணவர்கள் உடனடியாக ஆஸ்திரேலியா திரும்ப முடியுமா? என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்