செய்திகள்

திருநங்கைகளுடன், சென்னை போலீசார் விழிப்புணர்வு கலந்துரையாடல்

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை போலீசார், திருநங்கைகளுடன் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தினார்கள்.

தினத்தந்தி

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தலைமையக கூடுதல் கமிஷனர் லோகநாதன், புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிருத்திகா யாஷினி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். திருநங்கைகளின் அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்று பேசினார்கள்.

திருநங்கைகளின் வாழ்வை முன்னேற்றுதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடாமல், நல்வழிபாதையில் செல்லுதல் மற்றும் அவர்களின் உரிமை போன்றவை பற்றி திருநங்கைகளுக்கு இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே சுயவேலை வாய்ப்புத்திட்டத்தில் திருநங்கைகளுக்கு சென்னை போலீசார் செய்யும் உதவிகள் பற்றியும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு செய்யும் உதவிகள் பற்றியும் எடுத்து சொல்லப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் திருநங்கைகளிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏராளமான திருநங்கைகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை