மாவட்ட செய்திகள்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு, கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் நேற்று 10 ஆயிரம் லாரிகள் ஓடாததால் ரூ.25 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

கோவை,

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடவில்லை. கோவை லாரி பேட்டை, வடகோவை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந் தன.கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேலான லாரிகள் நேற்று ஓடவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் ரூ.25 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.5 கோடி அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ரூ.400 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ரூ.75 கோடி அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டது.

ஜவுளி, மோட்டார் பம்புகள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லாமல் முடங்கியது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் காய்கறி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு பிறகு மாலை 6 மணி முதல் லாரிகள் ஓட தொடங்கின. இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் லாரி போக்குவரத்து முழு அளவில் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு