மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 10,647 பேர் வேட்புமனு தாக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 10,647 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இதன்படி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நேற்று 117 பேரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 922 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதேபோல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 795 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,815 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான நேற்று மொத்தம் 5,649 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று வரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மொத்தம் 157 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1,410 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,703 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7,377 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 10,647 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை