மாவட்ட செய்திகள்

சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

ஆண்டிப்பட்டி அருகே ஆடிப்பெருக்கையொட்டி சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ பூஜைகளும், மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி இந்த கோவிலில், பழம் காய்கறி தானியம் மற்றும் சங்கு தீர்த்த அபிஷேகங்கள் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி பெருக்கையொட்டி நேற்று புண்ணிய தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு 108 சங்குகளில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் 108 சங்குகளில் இருந்த புனித நீரை ஊற்றி சிவனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு