மாவட்ட செய்திகள்

குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 11 மின் மோட்டார்கள் பறிமுதல்

நாகை பகுதியில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 11 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாக நாகை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆணையர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் வசந்தன், மின் பணியாளர் கந்தசாமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் நாகை நகராட்சிக்குட்பட்ட வெளிப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் பகுதியில் ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் குழாய்களில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் உறிஞ்சப் படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 11 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், நாகை பகுதியில் தற்போது கோடை காலத்தையொட்டி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நகராட்சியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் வீடுகளுக்கு எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அடிக்கடி புகார் அளித்து வருகின்றனர். மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதால், பொதுக்குழாய்களில் தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே மின் மோட்டார்கள் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சினால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்