நாகர்கோவில்,
நாகர்கோவில் பள்ளவிளையில் மத்திய அரசுக்கு சொந்தமான உணவு கிடங்கு அமைந்து உள்ளது. இந்த உணவு கிடங்குக்கு மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் சீனி (சர்க்கரை) ஆகியவற்றை சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறது.
இங்கு பாதுகாப்பாக வைக்கப்படும் உணவு பொருட்கள் தேவைக்கு ஏற்ப குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி வந்தது.