மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 19,502 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வில் 19 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் மொழிப்பாடம் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வில் 19 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் மொழிப்பாடம் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

பிளஸ்-2 தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. தூத்துக்குடி மாவட்டத்தில் 88 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 203 பள்ளிகளில் பயிலும் 9,407 மாணவர்கள், 10,963 மாணவியர் என மொத்தம் 20 ஆயிரத்து 370 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 170 மாற்றுத்திறனாளிகளும் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் 44 வினாத்தாள் கட்டுக் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அவைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பறக்கும் படை

வினாத்தாள் கட்டுகளை 22 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 155 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 88 பேர் துறை அலுவலர்களாகவும், 88 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 10 பேர் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 1300 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

19,502 பேர் எழுதினர்

முதல் நாளான நேற்று மொழிப்பாடம் தேர்வு நடைபெற்றது. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் மாவட்டத்தில் 941 பேர் தேர்வு எழுதவில்லை. இதனால் 19 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுதியதை பார்வையிட்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

10-ம் வகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 106 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 309 பள்ளிகளில் பயிலும் 11 ஆயிரத்து 968 மாணவர்கள், 12 ஆயிரத்து 31 மாணவிகள் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 999 பேர் எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு