மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 35 வயது வாலிபர், சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 35 வயது வாலிபர், சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது கையில் சிவசாமி என பச்சை குத்தப்பட்டு இருந்தது.

அதேபோல காட்டாங்கொளத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 60 வயது மூதாட்டி ஒருவரும் சரக்கு ரெயில் மோதி பலியானார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

தாம்பரம் ரெயில்வே போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்