மாவட்ட செய்திகள்

மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி; பா.ஜனதா மேலிடம் ஆலோசனை

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

தினத்தந்தி

பெங்களூரு,

எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. இந்த அரசில் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள் ஆகிய 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். இதனால் மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழங்குடியினத்தை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு மற்றும் குருபா சமூகத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கினால் துணை முதல்-மந்திரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை