மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் ரெயில் மூலம் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் பார்த்திபன் வழக்கம் போல கடம்பத்தூர் மோட்டார் சைக்கிள் நிறுத்தத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். இரவு வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியது அரக்கோணம் ஜோதிநகர் சாஸ்திரி தெருவை சேர்ந்த மணிகண்டன் (19), அவரது நண்பர் கும்மினிப்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தென்னரசு (19) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?