மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது; 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி நகரப் பகுதியில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், உதவி சப்இன்ஸ்பெக்டர் வெங்கடசலபதி மற்றும் போலீசார் இது குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

புதுச்சேரிகடலூர் சாலையில் கண்காணிப்பு பணியின்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முத்தாம்பாளையத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி ராஜ்குமார் (வயது 25), மெக்கானிக் சதீஷ்குமார் (22) என்பது தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சரக பகுதியில் 6 மோட்டார் சைக்கிள்கள், பெரியகடை போலீஸ் சரக பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தெரிவித்த தகவலின்படி பதுக்கி வைத்து இருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட உருளையன்பேட்டை போலீஸ்காரர்கள் சத்தியவேல், பிரேம்குமார் ஆகியோரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு (கிழக்கு) மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு