மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களிலும் என மொத்தம் 66 மையங்களில் இந்த தேர்வு நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள 102 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 257 மாணவர்களும், 6 ஆயிரத்து 343 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதே போல் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 74 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 752 மாணவர்களும், 5 ஆயிரத்து 115 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

மாவட்டம் முழுவதும் 176 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 9 மாணவர்களும், 11 ஆயிரத்து 458 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வை முன்னிட்டு 170 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு நடைபெறும் மையங் களை கண்காணித்தனர்.

கலெக்டர் ஆய்வு

ஓசூரில் தேர்வு நடைபெற்ற அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையங்களை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்றைய தமிழ் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்