மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்தில் ரூ.27லட்சம் லேப்டாப்கள் திருட்டு; 2 பேர் கைது

குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ரூ.27லட்சம் லேப்டாப்கள் திருட்டு போனது.

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் அந்த தனியார் நிறுவனத்தில் இருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 12 லேப்டாப்கள் திருட்டு போனது.

இதுகுறித்து மேலாளர் சஞ்சய் மேனன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லேப்டாப்பை திருடியது, திருவள்ளூரை அடுத்த பாப்பன் சத்திரத்தை சேர்ந்த அகில் முரளி (வயது 24) மற்றும் திருவள்ளூர் கீழ்மணம் பேட்டை சேர்ந்த சரவணன் (34) என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 12 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...