நெல்லை:
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் கே.டி.சி. நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டு வசதிய வாரிய காலனி பகுதியில் உள்ள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கே.டி.சி. நகரை சேர்ந்த முருகன் (வயது 24), சீனிவாசன் நகரை சேர்ந்த உதயசூரியா (19), பாளையங்கோட்டையை சேர்ந்த மகேஷ் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.