மாவட்ட செய்திகள்

சென்னையில் ஐம்பொன் சிலைகள் சாலையில் கண்டெடுப்பு

சென்னை திருவல்லிக்கேணியில் 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் சாலையில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் ஆறுமுகப்பா தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வாசலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலைகளை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜாம்பஜார் போலீசார், அங்கிருந்த சிலைகளை மீட்டனர். அதில் முக்கால் அடி அம்மன் சிலை, ஒரு அடி கிருஷ்ணர் சிலை மற்றும் ஒரு அன்னபூரணி சிலை ஆகியை இருந்தன. சிலைகளை வைத்துவிட்டுச் சென்றது யார் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலைகள் கோவிலில் வைத்து வழிபடப்பட்டவையா அல்லது கடத்தி வரப்பட்டவையா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு