மாவட்ட செய்திகள்

ரெயிலில் அடிபட்டு 3 புலிக்குட்டிகள் பலி : வாகனம் மோதி சிறுத்தைப் புலியும் உயிரிழப்பு

சந்திராப்பூர் மற்றும் நாக்பீத் பகுதிகளுக்கு இடையே உள்ள ஜூனோனா கிராமத்தின் அருகே,3 புலிக்குட்டிகள் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றன.

நாக்பூர்,

புலிக்குட்டிகள் மூன்றும் அப்போது அந்த வழியாக வந்த பல்லார்ஷா- கோண்டியா பயணிகள் ரெயில் மோதியதில் உடல் சிதைந்து உயிரிழந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த புலிக்குட்டிகளை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவை பிறந்து 6 மாதம் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

இதேபோல் நாசிக் மாவட்டம் மாலேகாவ் ஹடானே- தகிதி கிராமத்தில் உள்ள மாலேகாவ்- குசும்பா சாலையை கடக்க முயன்ற 1 வயது சிறுத்தைப்புலி ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த 2 சம்பவங்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை