மாவட்ட செய்திகள்

பாந்திராவில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது

பாந்திராவில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பாந்திரா, பி.கே.சி. ரோட்டில் வார இறுதி நாட்களில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள், கார் பந்தயங்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் பி.கே.சி. ரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் பி.கே.சி. ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்து கொண்டு இருந்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்துமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஒரு போலீஸ்காரர் மீது மோதுவது போல வந்து தப்பிச்செல்ல முயன்றனர். எனினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஒரு போலீஸ்காரரரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒரு வாலிபர் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த காரில் தலையை மோதிவிட்டு போலீசார் தன்னை தாக்கியதாக கூச்சல் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்களது பெயர் சல்மான்கான்(23), இஸ்தியாக் சேக்(25), சாகில் அன்சாரி(29) என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை