மாவட்ட செய்திகள்

3-வது கொரோனா அலை அபாயம் குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் பணி குழு: மந்திரி ராஜேஷ் தோபே தகவல்

3-வது கொரோனா அலை அபாயம் இருப்பதால் அதை எதிர்கொள்ள குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய பணிகுழு அமைக்கப்பட உள்ளதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

தினத்தந்தி

குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் குழு

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் 3-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அது குழந்தைகளை அதிகளவில் தாக்கும் எனவும் வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.இந்தநிலையில் 3-வது அலையை எதிர்கொள்ள வசதியாக குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய பணிக்குழு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 3-வது அலையை எதிர்கொள்ள வசதியாகவும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் நிபுணர்கள் குழுவை அமைக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 13 நிபுணர்கள் அடங்கிய குழந்தைகள் நல பணிக்குழு அமைக்கப்படுகிறது. குழந்தைகள் நல மருத்துவர் சுகாஸ் பிரபு இந்த குழுவின் தலைவராக இருப்பார். மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரக இயக்குனர் தத்யாராவ் லகானே உறுப்பினர் செயலாளராக இருப்பார் என்றார்.

மேலும் இதுகுறித்த உத்தரவையும் நேற்று அரசு வெளியிட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு