மாவட்ட செய்திகள்

புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 4 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 790 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 6 லட்சத்து 96 ஆயிரத்து 109 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 23 பெட்டிகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 350 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.

அதேபோல் ஐதராபாத்தில் இருந்து 17 பெட்டிகளில் 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன. ஒரே நாளில் சென்னை வந்த 4 லட்சத்து 70 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு