மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 4¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 4¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. தமிழகத்தில் இதுவரை சுமார் 1 கோடியே 67 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 40 பெட்டிகளில் 4 லட்சத்து 78 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

மத்திய தொகுப்பிற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும், தேவைப்படும் தென் மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு