மாவட்ட செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு 4 நாள் சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு 4 நாள் சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என மந்திரி திவாகர் ராவ்தே விளக்கம் அளித்தார்.

மும்பை,

மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கவேண்டும் என வலியுறுத்தி தீபாவளி பண்டிகையின் போது 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி சமயத்தில் நடந்த இந்த போராட்டத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஐகோர்ட்டு உத்தரவிற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் 4 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு 36 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் பரவியது. இதனால், போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இந்தநிலையில் இது குறித்து மாநில போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே கூறுகையில், 4 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு 4 நாள் சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்றார்.

மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு இ.எல். விடுப்பில் இருந்தும் 8 நாட்கள் கழிக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு