மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 5 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 5 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தினத்தந்தி

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 69 லட்சத்து 26 ஆயிரத்து 880 தடுப்பூசிகள் வந்து உள்ளன. நேற்று முன்தினம் இரவு புனேவில் இருந்து பெங்களூரு வழியாக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று இரவு புனேவில் இருந்து ஐதராபாத் வழியாக சென்னைக்கு 31 பெட்டிகளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 410 தடுப்பூசிகள் வந்தன. அவை விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேபோல் விமானத்தில் 14 பெட்டிகளில் வந்த 1 லட்சத்து 68 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு