மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

தேனி:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 342 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 24 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 951 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 234 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தமபாளையத்தை சேர்ந்த 43 வயது ஆண், தேனியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, பெரியகுளத்தை சேர்ந்த 73 வயது மூதாட்டி உள்பட 5 பேர் நேற்று பலியாகினர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்