மாவட்ட செய்திகள்

6 வருடங்கள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்

பரோலில் வந்து 6 வருடங்கள் தலை மறைவாக இருந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

மதுரவாயல் கந்தசாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், கடந்த 2002-ம் ஆண்டு வாலாஜாபாத்தை சேர்ந்த லட்சுமணன் (47) என்பவரை கொலை செய்த வழக்கில் வாலாஜாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2003-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சரவணன், 2012-ம் ஆண்டு புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். ஆனால் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சுமார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த சரவணன், மதுரவாயல் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு