மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 7 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 2 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு ஆகஸ்டு மாத ஒதுக்கீடான 79 லட்சம் தடுப்பூசியில் இதுவரை 29 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 66 பெட்டிகளில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 770 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை, தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை வந்த தடுப்பூசிகள், உடனடியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்