மாவட்ட செய்திகள்

சென்னை மின்சார ரெயில்களில் 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரின் பயணம் ரத்து

சென்னை மின்சார ரெயில்களில் 2 தவணை தடுப்பூசி போடாத 7,762 பேரை மின்சார ரெயிலில் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

தினத்தந்தி

சென்னையில் உள்ள மின்சார ரெயில்களில் கடந்த 10-ந் தேதி முதல் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பயணிக்க அனுமதி என தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே மின்சார ரெயில்களுக்கு கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் சீசன் டிக்கெட்களில் சான்றிதழ்களின் எண்களும் அச்சிடப்பட்டன. இந்த நிலையில் 2 தவணை தடுப்பூசி போடாமல் பயணம் மேற்கொள்கிறவர்களை கண்டறிய அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களிலும் தனிப்படை அமைத்து ரெயில்வே அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் 2 தவணை தடுப்பூசி போடாத 7 ஆயிரத்து 762 பேரை மின்சார ரெயிலில் பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் மட்டும் முக கவசம் அணியாதவர்கள் மீது 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.52 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்