மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 8 பேரும், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்:

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 8 பேரும், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

9&ந்தேதி தேர்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும், இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளுக்கும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் தற்செயல் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9&ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15&ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 18&ந்தேதி வரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு ஒருவரும், 5 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அரியலூரில்...

இந்நிலையில் நேற்று தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சி 6&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், கோவிலூர் ஊராட்சி 1&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தனூர் ஊராட்சி 5&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையக்குறிச்சி ஊராட்சி 2&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், நாகம்பந்தல் ஊராட்சி 6&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாபூர் ஊராட்சி 8&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 18&ந்தேதி வரை ஒருவர் மட்டும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவரும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சி 7&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும்.

===============

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்