மாவட்ட செய்திகள்

புனேவில் இருந்து 9 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவாகள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசும் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை அவ்வப்போது அனுப்புகிறது.

தினத்தந்தி

தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 830 கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 94 லட்சத்து 17 ஆயிரத்து 458 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து நேற்று சென்னை வந்த விமானத்தில் 77 பெட்டிகளில் 9 லட்சத்து 9 ஆயிரத்து 640 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. தடுப்பூசிகள் தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை வந்த தடுப்பூசிகள் தமிழகத்தில் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு