மாவட்ட செய்திகள்

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடி பாளையம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசர். இவரது மகன் விஜய் (வயது 23), கூலித்தொழிலாளி. ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்த ஒரு வியாபாரியின் 17 வயது நிரம்பிய மகள், ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை விஜய் கடந்த 3.4.2019-ந் தேதியன்று ஆசை வார்த்தை கூறி கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விஜய் கைது செய்யப்பட்டார். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்